செய்திகள்

Wednesday 25 November 2009

பொதுமான பயணிகள் ஏறியும் புரப்பட வில்லை !!!!!!!!!!!!!!!!!!!


ரயில் ! என்று கவிஞர்கள் இன்று மலையக மக்களை கைத்தட்டி கொட்டமடிக்கின்றனர். எழில் கொஞ்சும்  இந்து சமுத்திரத்தின் முத்தான எமது நாடு பல் கோடி வளச் சிறப்பினை பெற்று அழகுற வர்ணிக்கப்படுகின்றது. 


உலக சரித்திரத்தில் எட்டி பாய்கின்றதற்கு முயற்சித்தோ அந்தளவிற்கு  மலையக மக்களினதும் நாட்டு மக்களினதும் பங்களிப்பென்பது முற்று கட்டையாகவே திகழ்கின்றது. மேலும் இன்றைய நாட்டின் முதுகெழும்பான திகழும் மலைகய மக்களின் உதிரத்தையே வியர்வையாக சிந்தி உழை க்கும் அளவிற்கு மக்களின் உழைப்பு நாட்டிற்கு தேவைப்படுவதினை மஹாகவி பாரதி பின்வருமாறு விளக்குகின்றார். 
இரும்பை காய்ச்சி உருக்கிடுவீரே! என்ற வரிகளின் மூலம் அழகுற, தெளிவுற காட்டியுள் ளார். மேலும் இன்றை மலையக மக்களின் அன்றாட வாழ்வினையே கருப்பொருளாக கொண்டும் மலையக பிரச்சிணையை அடிப்படையாக கொண்டும் நான் இக்கட்டுரையை எழுத முயற்சிக்கின்றேன்.  


இன்று மலையக மக்களின் அன்றாட பிரச்சினையை எடுத்துக்கொள்வோமானால் மக்களின் வருமானம், அடிப்படை வசதிகள் போதிய அளவாக இல்லாத காரணத்தினால் ஆரம்பகால அதாவது புராதான வெள்ளையரால் அமைக்கப்பட்ட வீடுகளிலேயே வாழவேண்டிய ஒரு சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது. மேலும் அரசாங்கம் மக்களை கபடி ஆடும் பகடிவதைஆகவே கொள்ளப்படுவதனால் வாழ்க்கைதரத்தினை நிலையாக வைத்துகொள்வதற்கு பெரிதும் முட்டுக்கட்டையாகவே திகழ்கின்றது. 


மேலும் பொருளாதாரத்தின் ஊசலாகவும் தின்டாடுகின்ற நிலையும் நிலவுகின்றது. மேலும் மலையக பிரச்சிணையை மூலாதாரமாகக் கொண்டு சி.வி.வேலுப்பிள்ளை என்ற மலையக கவிஞர் தேயிலை தோட்டத்திலே எனும் கவிதை மூலம் அழகுற காட்டியுள்ளார்.                


புழுதிபடுக்கையில் எம்மக்களைப் போற்றும் இரங்கற் புகழ்மொழி இல்லை என்றார். 


இவ்வரிகளின் மூலம் மக்களின் அவல நிலையை வழுவூட்டி காட்டியுள்ளார் மேலும் மக்களின் கல்வி நிலையை எடுத்து ​நோக்கும் போது படிப்பு என்பது  எட்டாக்கணியாகவே மாணவர்கள் காணப்படுகின்றது.வரிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் தமது பொருளாதார பிரசுசிணை காரணமாக மேல் படிப்பினை தொடர முடுயாத நிலையும் நிலவுகின்றது.                


மேலும் விலையேற்றம் பொருட்களின் கொள்வனவு ஆகியனவும் மக்களுக்கு வாங்க முடியாத நிலை எட்டியுள்ளதனால் மேலும் இம்மக்களின் வாழ்வு சீரழிவிற்கு உற்படுகின்றது இனிவரும் யுகங்களாவது மலையக மக்களுக்கொரு முடிவு பெறும் விதிவலக்காய் அமையும் என்றும் கூறும் அளவிற்குநவீன யுகம் வளரும் என நாம் நம்புகின்றோம் மேலும் மலையக மக்களின் சுகாதார வசதி, கலாச்சார வசதி, பொருளாதார வசதி என்பன அதிகரித்துக்கொள்ளும் அளவிற்கு அரசாங்கம் மக்களுக்கென பல உதவி களையும்  சமூர்த்தி திட்டங்களையும், ஓய்வூதியம், ஆயுற்காலம், பாதுகாப்பு முதலிய சேவைகளையும் இன்றைய மலையக மக்களுக்காக அரசாங்கம் பங்களிப்பினை வளங்கி வருவதினை மகத்தான சேவைகளின் ஒன்றாக குறிப்பிடலாம். 


மேலும் மலையக மக்களின் பொருளாதார பிரச்சிணையை காலத்திற்கு காலம் பல கவிஞர்கள் தமது காலத்தில் நிலவிய சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு பற்பல நாவல்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளமை சிறப்பாக குறிப்பிடதக்க வியங்களில் ஒன்றாகும்.       ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு என்ற பலமொழியினை கருத்திற் கொண்டு மக்கள் ஒவ்வருவரும் ஒரு தாயின் பிள்ளை என்ற நோக்கில்  மலையக மக்களுக்கும் சிறந்த ஒரு நல்வாழ்வினை ஏற்படுத்த அணைவரும் ஒன்றிணைவோமாக.

N.மனோஜ்
ப/விபுலாநந்த தமிழ் மகா வித்தியாலயம்ஆண்டு 10

No comments:

Post a Comment