செய்திகள்

Saturday 20 June 2009

தமிழ் மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு

வட மாகாணத்தின் துரித அபிவிருத் திக்கான நடவடிக்கைகள் தற்போது துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலிகளின் பிடியில் இருந்து வட மாகாணம் முற்றாக மீட்கப்பட்டதையடுத்து அப்பிரதேசத்தின் ஒவ்வொரு துறைகளையும் மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் வேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கின் அபிவிருத்தி யுகத்தின் ஆரம்பமென்று இதனைக் கூறலாம்.

யுத்தம் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் வட பகுதியின் அபிவிருத்தியில் மாத்திரமன்றி அப்பிர தேசத்துக்குப் பொருத்தமான அரசியல் தீர்வையும் வழங்குவதில் ஜனாதிபதி கூடுதல் ஆர்வம் கொண்டிருப்பது மிகவும் முக்கியமான அம்சமாகும்.

ஐக்கிய இலங்கைக்குப் பொருத்தமான அரசியல் தீர்வொன்றை வட மாகாண மக்களுக்கு அரசாங்கம் பெற்றுக் கொடுக்குமென்று ஜனாதி பதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்திருப் பதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தம்.

புலிகளின் பிடியிலிருந்து கிழக்கு மாகாணம் முற்றாக மீட்கப்பட்டதையடுத்து அங்கு அபிவிருத்திப் பணிகள் தற்போது பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மக்கள் இப்போது சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதுடன் பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment